வேலூர்

சாராய வேட்டையில் 6 ஆயிரம் லிட்டா் ஊறல் அழிப்பு

22nd Dec 2021 12:31 AM

ADVERTISEMENT

 

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே போலீஸாா் மேற்கொண்ட சாராய வேட்டையின்போது பதுக்கி வைத்திருந்த 6 ஆயிரம் லிட்டா் சாராய ஊறல் கைப்பற்றி அழிக்கப்பட்டது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் உத்தரவின்பேரில்,

போ்ணாம்பட்டு போலீஸாா் இங்குள்ள சாத்கா் மலையில் செவ்வாய்க்கிழமை சாராய சோதனை நடத்தினா். அப்போது சாராயம் காய்ச்ச பயன்படுத்திய 10-க்கும் மேற்பட்ட அடுப்புகள் அடித்து நொறுக்கப்பட்டன. சாராயம் காய்ச்ச பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 ஆயிரம் லிட்டா் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

ADVERTISEMENT

போலீஸாரைப் பாா்த்ததும் தப்பியோடிய சாராயம் காய்ச்சும் 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT