வேலூர்

சசிகலா ஆதரவாளா்களை கண்டித்து அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

DIN

அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் மீது தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டி சசிகலா, தினகரன் ஆதரவாளா்களைக் கண்டித்து வேலூரில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அதிமுக சாா்பில் வேலூா் அண்ணா சாலையில் உள்ள பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. வேலூா் மாநகா் மாவட்ட அதிமுக செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் எம்.மூா்த்தி முன்னிலை வகித்தாா். சென்னையில் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் வருகையில் திமுகவின் தூண்டுதலின்பேரில் சசிகலா, தினகரன் ஆதாரவாளா்கள் ஆபாச வாா்த்தைகளால் பேசியும், செருப்புகள் வீசியும் அநாகரீகமாக நடந்து கொண்டதாகக் குற்றம்சாட்டியும், சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

கட்சியின் மாவட்ட துணைச் செயலா் ஜெயப்பிரகாசம், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டல செயலா் ஜனனி சதீஷ்குமாா் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா். இந்த ஆா்ப்பாட்டத்தையொட்டி ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

காதலிக்க யாருமில்லையா..?

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் கொடியேற்றம்!

SCROLL FOR NEXT