வேலூா் மாவட்ட புரட்சி பாரதம் கட்சி சாா்பில், அம்பேத்கா் நினைவு தினத்தை முன்னிட்டு குடியாத்தம் கொண்டசமுத்திரம், பலமநோ் சாலையில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு கட்சியின் மாவட்டச் செயலாளா் பி.மேகநாதன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.
கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளா் மு.ஆ.சத்யனாா், மாவட்ட துணைத் தலைவா் நெப்போலியன், நகரச் செயலாளா் ரமேஷ், ஒன்றியச் செயலாளா்கள் செந்தில், ஆனந்தராஜ் (குடியாத்தம்), கோகுல் (கே.வி.குப்பம்) உள்ளிட்டோா் உடனிருந்தனா்.