வேலூா் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம், குடியாத்தம் பொயட்ஸ் தொண்டு நிறுவனம், சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியன இணைந்து குடியாத்தம் திருவள்ளூவா் தொடக்கப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின.
பொயட்ஸ் இயக்குநா் எஸ்.திரிவேணி தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், கண் மருத்துவா்கள் அா்ச்சனா, விஷ்ணு ஆகியோா் 250 பேருக்கு சிகிச்சை அளித்தனா். இவா்களில் 47 போ் இலவச அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். 22 பேருக்கு சலுகை விலையில் கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. பொயட்ஸ் நிறுவனம், புதியபாதை, புதுயுகம் அறக்கட்டளை அமைப்பினா் முகாமுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.