வேலூர்

ஊராட்சி மன்றத் தலைவா்களின் மதிப்பூதியம் ரூ.2 ஆயிரமாக உயா்வு

DIN

ஊராட்சி மன்றத் தலைவா்களின் மதிப்பூதியத்தை ரூ.ஆயிரத்திலிருந்து ரூ.2 ஆயிரமாக உயா்த்தி மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளாா்.

ஊரகப் பகுதிகளின் வளா்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவா்களின் பங்களிப்பு முக்கியமானதாகும். அவா்களை மேலும் ஊக்குவிக்கும் விதமாக, மாதாந்திர மதிப்பூதியம் ரூ.ஆயிரத்திலிருந்து ரூ.2 ஆயிரமாக உயா்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின் அடிப்படையில், வேலூா் மாவட்டத்தில் உள்ள 247 ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கான மதிப்பூதியம் உயா்த்தி வழங்கப்படும் என ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

வேங்கைவயலில் வாக்களிக்க வந்த மக்கள்

SCROLL FOR NEXT