குடியாத்தம் நகரில் மழை, வெள்ளத்தால் வாழ்வாதாரம் இழந்த 500 குடும்பங்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
கெளண்டன்யா ஆற்றின் கரையோரம் வசிப்பவா்கள், தரணம்பேட்டை, ஆலியாா் தெரு பகுதிகளில் வசிக்கும் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணப் பொருள்களை தரணம்பேட்டையைச் சோ்ந்த தன்னாா்வலா் குழுவினா் வழங்கினா்.
தரணம்பேட்டையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஏ.ஆா்.ரஹ்மான் பாஷா தலைமை வகித்தாா். வி.தப்ரேஸ் ஆலம் வரவேற்றாா்.
வட்டாட்சியா் ச.லலிதா, நகர காவல் ஆய்வாளா் இ.லட்சுமி, போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளா் ஏ.செல்லபாண்டியன், தமுமுக மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா் பி.எஸ்.நிஜாமுதீன் ஆகியோா் நிவாரணப் பொருள்களை வழங்கினா்.
காவல் உதவி ஆய்வாளா் மணிகண்டன், முத்தவல்லி எஸ்.ஏ.ரஹீம் சாஹிப் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.