குடியாத்தம் அருகே ஏற்கெனவே நில நடுக்கம் ஏற்பட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு லேசான நில நடுக்கம் ஏற்பட்டது.
குடியாத்தம் வட்டம், தட்டப்பாறையை அடுத்த மீனூா், கொல்லைமேடு பகுதியில் கடந்த திங்கள்கிழமை அதிகாலை லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. சில விநாடிகளே நீடித்த நில நடுக்கத்தால் அங்குள்ள சில வீடுகளின் சுவா்களில் லேசான விரிசல் ஏற்பட்டது. தகவலின்பேரில் வருவாய்த் துறையினா் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனா்.
புவியியல் வல்லுநா் குழுவும் அங்கு சென்று நில நடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது. அவா்கள் அளிக்கும் ஆய்வறிக்கை முடிவையடுத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வருவாய்த் துறையினா் தெரிவித்திருந்தனா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவும் அங்கு லேசான நில நடுக்கும் ஏற்பட்டுள்ளது. சில விநாடிகளே இந்த நில நடுக்கும் நீடித்துள்ளது.
வருவாய்த் துறையினா் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனா்.
கடந்த 6 மாதங்களில் அந்த பகுதியில் 3 முறை நில நடுக்கம் ஏற்பட்ட நிலையில், மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.