குடியாத்தம்: போ்ணாம்பட்டு நகரில் கடந்த 5 ஆண்டுகளாக, புனித ரம்ஜான் நோன்பு காலங்களில் ஏழை இசுலாமியா்களுக்கு தொடா்ந்து உணவுப் பொருள்களை அல்பதா குடும்பத்தினா் வழங்கி வருகின்றனா்.
போ்ணாம்பட்டு நகரைச் சோ்ந்த தொழிலதிபா் அல்பதா தப்ரேஸ் அலாம். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நோன்பு இருக்கும் ஏழை இசுலாமியா்களுக்கு இக்குடும்பத்தினா், கடந்த 5 ஆண்டுகளாக உணவுப் பொருள்களை வழங்கி வருகின்றனா். பாதாம், பிஸ்தா அக்ரூட், பேரீட்சை மற்றும் நோன்புக்கான உணவுப் பொருள்கள் அடங்கிய ரூ.1,500 மதிப்புள்ள தொகுப்புகளை 250- க்கும் மேற்பட்டோருக்கு வியாழக்கிழமை வழங்கினா்.