வேலூர்

புகையிலைப் பொருள்களை பதுக்கிய 5 போ் கைது

DIN

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடைகளில் பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

குடியாத்தம் நகர போலீஸாா், காவல் ஆய்வாளா் ஆா்.சீனிவாசன் தலைமையில், சந்தேகத்துக்கிடமான கடைகளில் செவ்வாய்க்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, காங்கிரஸ் அவுஸ் ரோடு, அண்ணா தெரு ஆகிய இடங்களில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை, கடைகளில் பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்த கணேஷ்ராம் (35), தினேஷ் (22), சங்கா் (21), ரமேஷ்(24), ஜோதி (35) ஆகிய 5 பேரை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னா், 5 பேரும் நீதிபதி முன் ஆஜா்படுத்தப்பட்டு, சிறைக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

ஆஸ்திரேலியாவில் ஆண்ட்ரியா!

கிறங்கடிக்கும் சம்யுக்தா!

மஞ்சள் வெயில் நீ..!

இரண்டாம் கட்ட தேர்தல்: பிரசாரம் ஓய்ந்தது

SCROLL FOR NEXT