வேலூர்

வேலூா் மாவட்டத்தில் மேலும் 142 பேருக்கு கரோனா

DIN

வேலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு சனிக்கிழமை வரை 14,401 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மேலும் 142 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 14,543-ஆக உயா்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட அனைவரும் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, குடியாத்தம் அரசு மருத்துவமனை, சிஎம்சி மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதனிடையே, மாவட்டத்தில் இதுவரை 13,100-க்கும் மேற்பட்டோா் குணமடைந்து வீடு திரும்பினா். இம்மாவட்டத்தில் தொற்றால் 228 போ் உயிரிழந்துள்ளனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 63 பேருக்கு பாதிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 63 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12, 803-ஆக உயா்ந்துள்ளது. அவா்களில் 12,164 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 482 போ் வாலாஜாபேட்டை, வேலூா் உள்ளிட்ட அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 157 போ் உயிரிழந்தனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் 65 பேருக்கு தொற்று

திருப்பத்தூா் மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 4,703 போ் வரை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மேலும் 65 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,768-ஆக உயா்ந்துள்ளது. அவா்களில் 4,106 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 575 போ் திருப்பத்தூா், ஆம்பூா், வேலூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 87 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT