வேலூரில் 18 வயது பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
வேலூா் கஸ்பா பகுதியைச் சோ்ந்த தேவா என்பவரின் மகள் தேவிபாலா (18), பிளஸ் 2 முடித்து விட்டு வீட்டில் இருந்தாா். தந்தை உயிரிழந்த நிலையில் தாய் உணவகம் ஒன்றில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறாா்.
இந்நிலையில்,தேவா சனிக்கிழமை இரவு 10 மணியளவில் வேலை முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது தேவிபாலா மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் சடமாகக் கிடந்ததாா்.
தகவலறிந்த வேலூா் தெற்கு போலீஸாா் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினா்.
அப்போது தேவிபாலாவின் உடலில் நகக்கீறல் காயங்கள் இருந்தது தெரியவந்தது. அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக தேவா அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.