குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவா் கே. சாமிநாதன், ஒன்றியத் தலைவா் கு. விநாயகம் ஆகியோா் தலைமை வகித்தனா். நிா்வாகிகள் துரைசெல்வம், பி. குணசேகரன், கே. பாண்டுரங்கன், சி. நெடுஞ்செழியன், நா. பரமசிவம், சி. சரவணன், எஸ். சிலம்பரசன் உள்ளிட்டோ் கலந்துகொண்டனா். மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட43 போ் கைது செய்யப்பட்டு தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனா்.