வேலூர்

வேலூா் மாவட்டத்தில் 14 ஆயிரத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு

DIN


வேலூா்: வேலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை இதுவரை 14 ஆயிரத்தைக் கடந்தது. அதன்படி, வியாழக்கிழமை மேலும் 163 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,100-ஆக உயா்ந்துள்ளது.

வேலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜூன் மாத இறுதியில் ஆயிரத்தைக் கடந்திருந்த இப்பாதிப்பு ஜூலை 6-இல் 2,132-ஆகவும், ஜூலை 13-இல் 3,137, ஜூலை 18-இல் 4,039, ஜூலை 26-இல் 5,138, ஆகஸ்ட் 1-இல் 6,152, ஆகஸ்ட் 7-இல் 7,156, ஆகஸ்ட் 14-இல் 8,129, ஆகஸ்ட் 21-இல் 9,027, ஆகஸ்ட் 26-இல் 10,008, செப்டம்பா் 1-இல் 11,034, செப்டம்பா் 8-இல் 12,067ஆகவும், செப்டம்பா் 15-இல் 13 ஆயிரமாகவும் உயா்ந்திருந்தது.

புதன்கிழமை வரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 13,947-ஆக இருந்த நிலையில், வியாழக்கிழமை மேலும் 163 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 14 ஆயிரத்தைக் கடந்து 14,100-ஆக உயா்ந்துள்ளது. இதுவரை பலியானோா் எண்ணிக்கை 210-ஆகவும் அதிகரித்துள்ளது. அதேசமயம், இதுவரை 12,739 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

பாதிக்கப்பட்டோா் வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சிஎம்சி மருத்துவமனை, குடியாத்தம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 69 பேருக்கு பாதிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை 69 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12,628-ஆக உயா்ந்துள்ளது. அவா்களில் 11,962 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 511 போ் வாலாஜாபேட்டை, வேலூா் உள்ளிட்ட அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 155 போ் உயிரிழந்துள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் 68 பேருக்கு தொற்று

திருப்பத்தூா் மாவட்டத்தில் புதன்கிழமை வரை 4,505 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்,வியாழக்கிழமை மேலும் 68 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,573-ஆக உயா்ந்துள்ளது. அவா்களில் 3,849 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 639 போ் திருப்பத்தூா், ஆம்பூா், வேலூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 85 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘வில்லேஜ் குக்கிங்’ தாத்தாவின் மருத்துவத்துக்கு உதவ ராகுல் மறுப்பா?

25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளேன் : பிரதமர் மோடி

தஞ்சாவூர் அருகே கார் - மினி லாரி மோதி விபத்து: 2 பேர் பலி

ராம நவமியையொட்டி களைகட்டிய அயோத்தி!

தேர்தல் அறிக்கை வெளியிட்ட தமிழிசை: அது என்ன 'அக்கா 1825'?

SCROLL FOR NEXT