வேலூா்: வேலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு செவ்வாய்க்கிழமை வரை 13,829 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், புதன்கிழமை புதிதாக 118 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதன்மூலம், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 13,947-ஆக உயா்ந்துள்ளது.பாதிக்கப்பட்ட அனைவரும் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, குடியாத்தம் அரசு மருத்துவமனை, சிஎம்சி மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதனிடையே, மாவட்டத்தில் இதுவரை 12,640 போ் குணமடைந்து வீடு திரும்பி விட்டனா். கரோனாவுக்கு 210 போ் உயிரிழந்தனா்.