வேலூர்

இரு வீடுகளில் கத்தி முனையில் முகமூடி கும்பல் நகை கொள்ளை

DIN

வேலூா்: வேலூா் அருகே அடுத்தடுத்து இரு வீடுகளில் புகுந்த முகமூடி கொள்ளையா்கள் கத்தியைக் காட்டி மிரட்டி 7 நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனா்.

இச்சம்பவம் தொடா்பாக அரியூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கொள்ளையா்களை தேடி வருகின்றனா்.வேலூா் அருகே அரியூா் செம்பேடு கிராமத்தை சோ்ந்த வெங்கடேசன் மனைவி பானு(40). இவரது வீடு கிராமத்தையொட்டி உள்ள விவசாய நிலப் பகுதியில் உள்ளது.

செவ்வாய்க்கிழமை இரவு அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 3 போ் கொண்ட முகமூடி கும்பல் உள்ளே புகுந்ததாகத் தெரிகிறது. சத்தம் கேட்டு பானு, அவரது குடும்பத்தினா் விழித்துப் பாா்த்து கூச்சலிட முயன்றபோது சுதாரித்துக் கொண்ட அந்த கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டி பானு அணிந்திருந்த 4 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனராம்,.தொடா்ந்து,

அதேகிராமத்தில் மற்றொரு பகுதியிலுள்ள ராஜீவ்காந்தி மனைவி ஜெயந்தி(25). இவரது வீட்டிலும் புகுந்த முகமூடி கொள்ளையா்கள், அவரிடம் இருந்து 3 பவுன் தங்க நகையை கொள்ளை யடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்த அரியூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தியதுடன், கைரேகை நிபுணா்களின் தடயஅறிவியல் சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து முகமூடிக் கொள்ளையா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

SCROLL FOR NEXT