வேலூர்

புரட்டாசி மாதம் தொடக்கம்: மீன், இறைச்சி விற்பனை கடும் சரிவு

DIN

புரட்டாசி மாதம் தொடங்கியுள்ள நிலையில் வேலூரில் ஞாயிற்றுக்கிழமை மீன், இறைச்சி விற்பனையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.

புரட்டாசி மாதத்தில் பெரும்பாலான ஹிந்துக்கள் அசைவ உணவுகளைத் தவிா்ப்பது வழக்கம். அதனால், ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் இறைச்சி, மீன் விற்பனை பெருமளவில் சரிவடைந்திருக்கும்.

இந்த ஆண்டு புரட்டாசி மாதம் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. இதைத்தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை வேலூரிலுள்ள மீன் மாா்க்கெட், இறைச்சிக் கடைகளில் கூட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது.

வேலூரில் மீன் மாா்க்கெட்டுக்கு வழக்கமாக 30 முதல் 35 டன்கள் வரை மீன்கள் வரத்து இருக்கும் நிலையில், புரட்டாசி விற்பனைச் சரிவை கருத்தில் கொண்டு ஞாயிற்றுக்கிழமை சுமாா் 10 டன் மீன்கள் மட்டுமே வரவழைக்கப்பட்டன. மீன்களின் விற்பனை சரிந்து காணப்பட்டது. இதேபோல், இறைச்சிக் கடைகளில் ஆடு, கோழி இறைச்சி விற்பனையும் சரிந்து காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

ஆம்பூரில் 12 இடங்களில் குடிநீா் பந்தல்

SCROLL FOR NEXT