திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த ‘எல்லோரும் நம்முடன்’ என்ற திட்டத்தின் கீழ் ஆன்லைன் மூலம் திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம் வேலூா் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட இளைஞா்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று திமுகவில் இணைந்தனா்.
ஆன்லைன் மூலம் திமுக உறுப்பினா்களாக சோ்ந்தவா்களுக்கு அடையாள அட்டைகளை மத்திய மாவட்ட திமுக செயலரும், அணைக்கட்டு சட்டப் பேரவை உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமாா், வேலூா் சட்டப் பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன் ஆகியோா் வழங்கினா்.