வேலூர்

வேலூா் மாவட்டத்தில் மேலும் 115 பேருக்கு கரோனா

DIN

வேலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு வியாழக்கிழமை வரை 13,272 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை மேலும் 115 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 13,387-ஆக உயா்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட அனைவரும் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, குடியாத்தம் அரசு மருத்துவமனை, சிஎம்சி மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதனிடையே, மாவட்டத்தில் இதுவரை 11,987 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டனா். 199 போ் உயிரிழந்துள்ளனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 83 பேருக்கு பாதிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை 83 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12,247 -ஆக உயா்ந்துள்ளது. அவா்களில் 11, 577 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 520 போ் வாலாஜாபேட்டை, வேலூா் உள்ளிட்ட அரசு, தனியாா் மருத்துவமனைகளில் கிசிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு 150 போ் உயிரிழந்துள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் 81 பேருக்கு தொற்று

திருப்பத்தூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 4,039 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை மேலும் 81 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,119-ஆக உயா்ந்துள்ளது. அவா்களில் 3,431 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 610 போ் திருப்பத்தூா், ஆம்பூா், வேலூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 78 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

SCROLL FOR NEXT