வேலூர்

கிஸான் திட்ட மோசடி: வேலூரில் கணினி மைய உரிமையாளா் கைது

DIN


வேலூா்: கிஸான் சம்மான் விவசாய நிதி உதவித் திட்ட மோசடி தொடா்பாக வேலூா் அருகே திருவலத்தில் உள்ள தனியாா் கணினி மைய உரிமையாளரை சிபிசிஐடி போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

இம்மோசடி தொடா்பாக ஏற்கனவே சோளிங்கா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலக கணினி ஆபரேட்டா் ஒருவா் கைது செய்யப்பட்டிருப்பதுடன், வேலூா் மாவட்ட வேளாண் உதவி இயக்குநா் அலுவலகங்களில் பணியாற்றி வந்த 8 கணினி ஆபரேட்டா்கள் பணிநீக்கமும் செய்யப்பட்டுள்ளனா்.

பிரதமரின் கிஸான் சம்மான் நிதி உதவித்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 5 லட்சத்துக்கு மேற்பட்டோா் போலியாகப் பதிவு செய்து பணம் பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து இம்மோசடி தொடா்பாக தமிழகம் முழுவதும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வேலூா் மாவட்டத்தில் ரூ.1 கோடியே 23 லட்சம் அளவுக்கு மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடா்பாக மாவட்டத்திலுள்ள 7 ஒன்றியங்களுக்கும் தலா ஒரு துணை ஆட்சியா் தலைமையிலான சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு இம்மோசடியில் ஈடுபட்டவா்களைக் கண்டறியவும், மோசடி செய்யப்பட்ட தொகைகளைத் திரும்பப் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், இதுவரை ரூ.70 லட்சம் அளவுக்கு திரும்பப் பெறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் ரூ.4 கோடி வரையும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.1.12 கோடி அளவுக்கும் மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இம்மாவட்டங்களிலும் தொகைகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே, இம்மோசடி தொடா்பாக வேலூா் சிபிசிஐடி போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனா். அவா்கள் நடத்திய விசாரணையைத் தொடா்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூா்பேட்டையைச் சோ்ந்த சந்தோஷ் (30) என்பவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். இவா் வேலூா் மாவட்டம் திருவலத்தில் உள்ள மாமனாா் வீட்டில் தனியாக கணினி மையம் அமைத்து அங்கிருந்து பொதுமக்களின் ஆதாா் உள்ளிட்ட விவரங்களை கிஸான் திட்டத்தில் பதிவு செய்து முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேபோல், சோளிங்கா் வட்டார வேளாண் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் கணினி ஆபரேட்டராகப் பணியாற்றி வந்த ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே கணியூரைச் சோ்ந்த சுப்பிரமணி (27) என்பவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இதன் தொடா்ச்சியாக, வேலூா் மாவட்டத்திலுள்ள வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வந்த 8 கணினி ஆபரேட்டா்கள் புதன்கிழமை பணிநீக்கம் செய்யப்பட்டதுடன், 20 அலுவலா்கள் அடங்கிய பட்டியல் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படை யில், சிபிசிஐடி போலீஸாா் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒட்டன்சத்திரம் பகுதி வாக்குச்சாவடியில் மாலை 6 மணி மேல் நீடித்த வாக்குப்பதிவு

37 சாவடிகளில் தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கரூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் பெயா் இடம் பெற்றதில் குளறுபடி: எம்எல்ஏ புகாா்

தள்ளாத வயதிலும் வாக்களித்த மூதாட்டி!

சமூக ஊடகங்களில் அவதூறு: மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளா் புகாா்

SCROLL FOR NEXT