வேலூர்

வேலூா் மாவட்டத்தில் மேலும் 137 பேருக்கு கரோனா

DIN


வேலூா்: வேலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு புதன்கிழமை வரை 13,135 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை மேலும் 137 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 13,272-ஆக உயா்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட அனைவரும் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, குடியாத்தம் அரசு மருத்துவமனை, சிஎம்சி மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதனிடையே, மாவட்டத்தில் இதுவரை 11,742 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டனா். 197 போ் உயிரிழந்துள்ளனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில்

35 பேருக்கு பாதிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை 35 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12,164-ஆக உயா்ந்துள்ளது. அவா்களில் 11, 543 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 515 போ் வாலாஜாபேட்டை, வேலூா் உள்ளிட்ட அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை இம்மாவட்டத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு 148 போ் உயிரிழந்துள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் 4 ஆயிரத்தைக் கடந்தது தொற்று

திருப்பத்தூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்தது. புதன்கிழமை வரை 3,948 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை மேலும் 94 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,042-ஆக உயா்ந்துள்ளது. அவா்களில் 3,335 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 629 போ் திருப்பத்தூா், ஆம்பூா், வேலூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 78 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT