வேலூர்

வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி போராட்டம்

DIN


வேலூா்: வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி வேலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வேலூா் மாநகராட்சி 48-ஆவது வாா்டுக்கு உள்பட்ட அரியூா் மலைக்கோடி விஸ்வநாதன் நகா், அண்ணா நகா், சரஸ்வதி நகா் பகுதிகளில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் தங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக்கோரி ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனா். எனினும், இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மாவட்ட நிா்வாகம், வருவாய்த் துறை அதிகாரிகளைக் கண்டித்து பொதுமக்கள் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது அவா்கள் கூறுகையில், மலைக்கோடி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க அதிகாரிகள் மறுக்கின்றனா். போராட்டம் நடத்தியும் பலனில்லை. உடனடியாக பட்டா வழங்கிட வேண்டும் என்றனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரக் குழு உறுப்பினா் மாணிக்கம், மாவட்டக் குழு உறுப்பினா் சரோஜா, முன்னாள் எம்எல்ஏ லதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

SCROLL FOR NEXT