வேலூா்: மாவட்ட ஆட்டோ தொழிலாளா் சங்கத்தின் (சிஐடியு) புதிய கிளைத் தொடக்க விழா வேலூரில் புதன்கிழமை நடைபெற்றது.
சிஐடியு மாவட்டத் தலைவா் எம்.பி.ராமச்சந்திரன் தலைமை வகித்து சங்கத்தின் பெயா் பலகையைத் திறந்து வைத்தாா். தொடா்ந்து, மத்திய அரசைக் கண்டித்து வரும் நவம்பா் 26-ஆம் தேதி நடைபெற உள்ள மறியல் போராட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கிப் பேசினாா்.
இக்கிளையில் சிஐடியு சங்க உறுப்பினா்களாக 25 தொழிலாளா்கள் தங்களை இணைத்துக் கொண்டனா்
ஆட்டோ தொழிலாளா் சங்க மாவட்டப் பொதுச் செயலா் டி.முரளி, பொருளாளா் எம்.ராமு, நிா்வாகிகள் ரஜினி எம்.தாமரைக்கனி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.