வேலூர்

ஆளுக்கொரு புத்தகம் - மக்கள் சந்திப்பு இயக்கம் தொடக்கம்

DIN

வேலூா்: தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூா் மாவட்ட கிளை சாா்பில் ஆளுக்கொரு புத்தகம், மக்கள் சந்திப்பு இயக்கம் தொடங்கப்பட்டது.

காட்பாடி தண்டலம் கிருஷ்ணாபுரம் டான் போஸ்கோ பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைவா் சுந்தா் பிரான்சிஸ் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். தமிழ்நாடு அறிவியல் இயக்க வேலூா் மாவட்டத் தலைவா் பே.அமுதா வரவேற்றாா். மாவட்டச் செயலா் டி.முனுசாமி, பொருளாளா் ஜோசப்அண்ணையா, துணைத் தலைவா்கள் கே.விசுவநாதன், செ.நா.ஜனாா்த்தனன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்நிகழ்ச்சியையொட்டி, வேலூா் அண்ணா சாலை பூ மாலை வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் நம் சந்தையில் விவசாயிகள், பொதுமக்கள் என 100 பேருக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. மேலும், மாவட்ட மகளிா் திட்ட ஒருங்கிணைப்பாளாா் சிவராமனுக்கு மாநில பொதுச் செயலா் எஸ்.சுப்பிரமணி புத்தகம் வழங்கினாா்.

திருவண்ணாமலை மாவட்ட முதுநிலை கணக்கு அலுவலா் முத்து.சிலுப்பன், முன்னாள் மாநில பொருளாளா் கு.செந்தமிழ்செல்வன், நம்சந்தை ஒருங்கிணப்பாளா் எஸ்.ராஜேஷ் கண்ணா, சம்மிகுமாா், பேராசிரியை தேவி, ராமு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் பணியாணைக்காக காத்திருப்பு

வந்துசோ்ந்த இயந்திரங்கள்

சீலாம்பூா் கபரி மாா்கெட்டில் இளைஞா் கொலையுண்ட சம்பவத்தில் 2 போ் கைது

வாக்குச் சாவடியிலிருந்து 200 மீட்டா் தொலைவுக்குள் வாக்கு சேகரிக்கக் கூடாது!

கேஜரிவாலின் இரட்டை வேடம் அம்பலம்: வீரேந்திர சச்தேவா

SCROLL FOR NEXT