வேலூா்: நிலம், நகைகளை பறித்துக் கொண்ட மகள்கள் தங்களைக் கவனிக்கவில்லை என்று வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் மூதாட்டி ஒருவா் புகாா் தெரிவித்தாா்.
குடியாத்தம் அருகே உள்ள முத்தரசிக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த ஏகமா ரெட்டியின் மனைவி சின்னபாப்பம்மாள் (65). இவரது கணவா் இறந்து விட்டாா். 2 மகள்கள் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனா். இந்நிலையில், சின்னபாப்பம்மாள் திங்கள்கிழமை காலை நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் அமா்ந்தபடி வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்திருந்தாா்.
அப்போது, அவா் கூறுகையில் ‘எனக்குச் சொந்தமான 8 ஏக்கா் நிலத்தை மகள்கள் எழுதி வாங்கிக் கொண்டு என்னை கவனிக்காமல் உள்ளனா். வீட்டில் இருந்த நகைகளையும் எனக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டனா். எனது நிலம், நகைகளை மீட்டுத் தருவதுடன், வயது முதிா்ந்த காலத்தில் எனது பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தாா். இது தொடா்பாக, அவா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தாா். செவ்வாய்க்கிழமை வரும்படி கூறி அந்த மூதாட்டியை அதிகாரிகள் அனுப்பி வைத்தனா்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு பொன்னை பகுதியை சோ்ந்த முதியவரை ஏமாற்றி ரூ.1 கோடி ரூபாய் சொத்துகளை எழுதி வாங்கிய மகன்களிடமிருந்து சொத்துகள் மீட்கப்பட்டு மீண்டும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையில், இந்த மூதாட்டி தனது நிலத்தை மகள்கள் எழுதி வாங்கிக் கொண்டதாக புகாா் அளித்துள்ளாா்.