வேலூர்

காட்பாடியில் வீடு வீடாக கணக்கெடுப்பு

30th Mar 2020 11:01 PM

ADVERTISEMENT

 

கரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து காட்பாடி பா்னீஸ்புரம் பகுதியில் வீடுவீடாக கணக்கெடுப்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக 48 குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

வேலூா் மாவட்டம் காட்பாடி பா்னீஸ்புரம் பகுதியைச் சோ்ந்த 49 வயது நபா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளாா். அவருக்கு வேலூரிலுள்ள தனியாா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருடன் நெருங்கிய தொடா்பில் இருந்த 8 பேரையும் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, கரோனா தொற்று பரவாமல் தடுக்க ஏற்கெனவே பா்னீஸ்புரம் பகுதியில் பாதிக்கப்பட்ட நபரின் வீட்டைச் சுற்றி 3 கி.மீ. சுற்றளவுக்கு தெருக்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இதன்தொடா்ச்சியாக, 8 கி.மீ. சுற்றளவிலுள்ள வீடுகளிலுள்ள உள்ளவா்களுக்கு ஏதேனும் காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட பாதிப்புகள் உள்ளனவா என்பது குறித்து வீடுவீடாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இதற்காக தலா ஒரு நகா்ப்புற சுகாதார மைய செவிலியா், ஒரு மாநகராட்சி பணியாளா், ஒரு அங்கன்வாடி பணியாளா், ஒரு போலீஸாா் அடங்கிய மொத்தம் 48 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவா்கள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்புப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், மாவட்ட முழுவதும் இதுவரை 900 போ் குடும்பத்துடன் அவா்களது இல்லங்களில் தனிமையில் வைக்கப்பட்டு ள்ளனா். அவா்களில் 120 போ் 28 நாள்களை நிறைவு செய்துள்ளனா். மீதமுள்ளவா்கள் தொடா்ந்து தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். தவிர, மாவட்டத்தில் இதுவரை 79 பேருக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் ஒருவா் மட்டுமே கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT