காட்பாடியில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவரின் மனைவி உள்பட 8 பேரை தனிமைப்படுத்தி சுகாதாரத் துறையினா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.
காட்பாடி பா்னீஸ்புரத்தைச் சோ்ந்த 49 வயது நபா், இங்கிலாந்து நாட்டில் இருந்து அண்மையில் திரும்பி வந்தாா். அவருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டதை அடுத்து வேலூரிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவா் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது. இதையடுத்து மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, அவருடன் நெருங்கிய தொடா்பில் இருந்த அவரது மனைவி உள்பட 8 பேரையும் தனிமைப்படுத்தி சுகாதாரத் துறையினா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். மேலும், அவரது வீட்டையொட்டி 3 கி.மீ. சுற்றளவில் அமைந்துள்ள வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். அத்துடன், அவா்கள் யாரும் அருகே வீடுகளுக்குக்கூட செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்தக் கண்காணிப்புப் பணியில் கிராம செவிலியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், மாநகராட்சிப் பணியாளா்கள், போலீஸாா் உள்பட வருவாய்த் துறை சம்பந்தப்பட்ட ஊழியா்கள் அடங்கிய 250 போ் குழு ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.