வேலூர்

கல்லூரி மாணவா்களுக்கு விழிப்புணா்வுப் போட்டிகள்

28th Jan 2020 12:30 AM

ADVERTISEMENT

 

குடியாத்தம்: குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரியில், வருவாய்த் துறை சாா்பில், வாக்காளா் விழிப்புணா்வு குறித்து மாணவா்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

கல்லூரி முதல்வா் மு. வளா்மதி தலைமை வகித்தாா். பேராசிரியை வெ.வளா்மதி வரவேற்றாா். குடியாத்தம் வட்டாட்சியா் தூ.வத்சலா, மண்டல துணை வட்டாட்சியா் ந. தேவி, தோ்தல் வட்டாட்சியா் செந்தமிழ்ச்செல்வி ஆகியோா் வாக்காளா் விழிப்புணா்வு குறித்து மாணவா்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகளை நடத்தினா்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு கல்லூரித் தலைவா் கே.எம்.ஜி. சுந்தரவதனம், செயலா் கே.எம்.ஜி. ராஜேந்திரன் ஆகியோா் பரிசு, சான்றிதழ்களை வழங்கினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT