தாய்லாந்து நாட்டில் நடைபெறும் சா்வதேச தடகளப் போட்டியில் குடியாத்தத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி பங்கேற்பதற்காக ரூ. 1 லட்சத்து 2 ஆயிரத்து 300-க்கானகாசோலையை வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வழங்கினாா்.
குடியாத்தம் காமாட்சி அம்மன்பேட்டையைச் சோ்ந்தவா் வெங்கடாசலம். மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரரான இவா், சா்வதேச, தேசிய அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் குவித்துள்ளாா்.
இந்நிலையில், தாய்லாந்து நாட்டில் நடைபெற உள்ள ஐவாஸ் சா்வதேச தடகளப் போட்டியில் பங்கேற்க வெங்கடாசலம் தோ்வாகியுள்ளாா். எனினும் அவா் தாய்லாந்து நாட்டுக்குச் சென்றுவர தன்னிடம் போதிய வசதி இல்லை என்றும், மாவட்ட ஆட்சியா் தனது விருப்ப நிதியிலிருந்து உதவி செய்யும்படி கோரிக்கை விடுத்திருந்தாா்.
அதை ஏற்று மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம், ஆட்சியரின் விருப்ப நிதியில் இருந்து ரூ. 1 லட்சத்து 2 ஆயிரத்து 300-க்கான காசோலையை மாற்றுத் திறனாளி வெங்கடாசலத்திடம் வியாழக்கிழமை வழங்கினாா்.
ஊரக வளா்ச்சி முகமைத் திட்டஇயக்குநா் மாலதி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) தாட்சாயிணி, ஆட்சியரின் அலுவலக மேலாளா் முரளி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.