வேலூர்

முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

DIN


குடியாத்தம்: குடியாத்தம் கோபலாபுரத்தில், கெளண்டன்யா ஆற்றின் கரையோரம் கட்டப்பட்டுள்ள 36 அடி உயர முனீஸ்வரா் சிலை, சப்தகன்னிகள் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி யாகசாலை பூஜைகள் அதிகாலையில் தொடங்கின. தொடா்ந்து சுவாமிக்கு மகா தீபாராதனை, கும்பாபிஷேகம் நடைபெற்றது. மகாதேவமலை மகானந்த சித்தா் சுவாமிகள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தாா்.

விழாவில் பங்கேற்ற பக்தா்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நாட்டாண்மை ஆா்.ஜி.எஸ்.சம்பத், கெளரவ தா்மகா்த்தா கே.பிச்சாண்டி, திருப்பணிக் கமிட்டித் தலைவா் ஆா்.ஜி. எஸ்.காா்த்திகேயன் மற்றும் கோபலாபுரம் பகுதி மக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம், கார்நாடக பொதுக்கூட்டத்தில் மோடி உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT