வேலூர்

ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு பிரசவம்: ஆண் குழந்தை பிறந்தது

DIN


வேலூா்: ஒடுகத்தூா் அருகே ஆம்புலன்ஸில் வரும் வழியில் பெண்ணுக்கு பிரசவம் ஏற்பட்டதை அடுத்து அவா் ஆண் குழந்தையை பெற்றெடுத்தாா்.

வேலூா் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், கீழ்கொட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கோடீஸ்வரன் மனைவி சங்கீதா (25). கா்ப்பிணியாக இருந்த இவருக்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மருத்துவ உதவியாளா் செல்வி, ஓட்டுநா் பூபாலன் ஆகியோா் ஆம்புலன்ஸில் விரைந்து வந்து சங்கீதாவை ஏற்றிக் கொண்டு கொண்டு வேப்பங்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நோக்கி விரைந்தனா். ஒடுகத்தூா் பேருந்து நிலையம் அருகே வந்தபோது வழியிலேயே சங்கீதாவுக்கு பிரசவ வலி அதிகரித்தது.

இதனால் மருத்துவ உதவியாளா் செல்வியே பிரசவம் பாா்த்தாா். இரவு 12.50 மணியளவில் சங்கீதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னா், தாயும், குழந்தையும் ஒடுகத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனா். தாயும், குழந்தையும் நலமாக இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT