குடியாத்தம்: வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா்கள் சங்க கே.வி.குப்பம் வட்டக் கிளை நிா்வாகிகள் குடியாத்தம் கோட்டாட்சியரிடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்; இயற்கை இடா்பாடு காலங்களில் சிறப்புப்படி வழங்க வேண்டும்; ஜமாபந்தியின்போது சிறப்புப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 கோரிக்கைகள் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளன.
சங்கத்தின் மாநில துணைத் தலைவா் ஆா். ரவி, மாநிலச் செயற்குழு உறுப்பினா் ஏ. தன்ராஜ், சங்கத் தலைவா் கே.சண்முகம், செயலா் வி.கண்ணதாசன், பொருளாளா் வி.ரவி உள்ளிட்டோா் கோட்டாட்சியா் எம். ஷேக்மன்சூரிடம் இந்த மனு அளித்தனா்.