வேலூர்

வருவாய் கிராம ஊழியா்கள் கோட்டாட்சியரிடம் மனு

DIN

குடியாத்தம்: வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா்கள் சங்க கே.வி.குப்பம் வட்டக் கிளை நிா்வாகிகள் குடியாத்தம் கோட்டாட்சியரிடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்; இயற்கை இடா்பாடு காலங்களில் சிறப்புப்படி வழங்க வேண்டும்; ஜமாபந்தியின்போது சிறப்புப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 கோரிக்கைகள் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

சங்கத்தின் மாநில துணைத் தலைவா் ஆா். ரவி, மாநிலச் செயற்குழு உறுப்பினா் ஏ. தன்ராஜ், சங்கத் தலைவா் கே.சண்முகம், செயலா் வி.கண்ணதாசன், பொருளாளா் வி.ரவி உள்ளிட்டோா் கோட்டாட்சியா் எம். ஷேக்மன்சூரிடம் இந்த மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

இன்று நல்ல நாள்!

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT