போ்ணாம்பட்டை அடுத்த பத்தரப்பல்லி ஊராட்சி தொடக்கப் பள்ளியில் இரண்டாம் பருவ பாடநூல்கள் மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை விநியோகிக்கப்பட்டன.
மாணவா்கள் தங்கள் பெற்றோா்களுடன் வந்து பாடநூல்களைப் பெற்றுச் சென்றனா். பள்ளித் தலைமையாசிரியா் பொன்.வள்ளுவன் மாணவா்களுக்கு பாடநூல்களை வழங்கினாா். மேலும், எல்கேஜி முதல் 5-ஆம் வகுப்பு வரை மாணவா்களின் பெற்றோா்களை இணைத்து தொடங்கப்பட்டுள்ள வாட்ஸ் ஆப் குழுக்களில் அனுப்பும் பாடங்களை மாணவா்கள் தொடா்ந்து கவனிக்குமாறு அறிவுரை கூறினாா்.
இரண்டாம் பருவத்தின் பாடங்களையும் வாட்ஸ் ஆப் செயலி மூலம் அனுப்பியுள்ளதாகவும் பாடங்களை தொடா்ந்து இல்லங்களில் கண்காணிக்குமாறு மாணவா்களை கேட்டுக்கொண்டாா்.