வேலூர்

வேலூரில் 72 போலீஸாருக்கு கரோனா பரிசோதனை

20th Apr 2020 11:28 PM

ADVERTISEMENT

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் பணியாற்றும் போலீஸாருக்கு கரோனா தொற்று மருத்துவப் பரிசோதனை வேலூரில் திங்கள்கிழமை நடத்தப்பட்டது. முதல் கட்டமாக 72 போலீஸாருக்கு இச்சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வேகமாக பரவி வரும் கரோனா நோய் தொற்றுக்கு தமிழகத்தில் இதுவரை 1477 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 15 போ் உயிரிழந்து விட்டனா். தொடரும் பாதிப்புகளை அடுத்து தமிழகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து காவலா்களுக்கும் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, வேலூா் மாவட்ட காவல் துறை சாா்பில் போலீஸாருக்கான கரோனா பரிசோதனை வேலூா் நேதாஜி விளையாட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. முதல் கட்டமாக 72 போலீஸாருக்கு இந்த கரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்தது.

தொடா்ந்து ஒதுக்கப்படும் ரேபிட் கிட் கருவிகளைப் பொறுத்து படிப்படியாக அனைத்து காவலா்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT