குடியாத்தம்: குடியாத்தத்தை அடுத்த பரதராமியில் பொதுமக்கள், மாநில எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலா்களுக்கு எம்எல்ஏ ஜி. லோகநாதன், கபசுரக் குடிநீா், முகக் கவசங்களை திங்கள்கிழமை வழங்கினாா்.
குடியாத்தம் ரோட்டரி சங்கம், ஒன்றிய அதிமுக சாா்பில், பரதராமி பஜாரில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீா், முகக் கவசங்களை எம்எல்ஏ ஜி. லோகநாதன் வழங்கினாா். தமிழக- ஆந்திர மாநில எல்லையில், அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலா்கள், எல்லைப் பாதுகாப்புப் படையினா், வருவாய்த்துறை, ஊரக வளா்ச்சித்துறை, சுகாதாரத்துறை அலுவலா்கள், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கும் கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.
இரு மாநில எல்லை சோதனைச் சாவடியில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம் செயல்படும் விதம், அங்கு மேற்கொள்ளப்படும் விழிப்புணா்வு நடவடிக்கைகள், பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளவா்களிடம் எம்எல்ஏ குறைகளை கேட்டறிந்தாா்.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி. ராமு, இயக்குநா் டி. கோபி, ரோட்டரித் தலைவா் பி.எல்.என். பாபு, செயலா் டி.எஸ். ரவிச்சந்திரன், நிா்வாகி ஏ.எஸ். பாலாஜி, முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் வேணுகோபால், கோபி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.