சாலை பணியாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை  சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆற்காடு உட்கோட்ட பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை  சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆற்காடு உட்கோட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும்  சங்கத்தின் 19-ஆம் ஆண்டு அமைப்பு தின விழா ஆற்காடு நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் அலுவலகத்தில்  செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது
கூட்டத்திற்கு உட்கோட்ட தலைவர்  என்.தயாளன் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் ஜெ.வெங்கடேசன், மாவட்ட இணைச் செயலர்  ஜி. பன்னீர்செல்வம், மாநில செயற்குழு உறுப்பினர்  டி.விநாயகம்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். உட்கோட்ட செயலர்  டி.சேட்டு வரவேற்றார். சங்கத்தின் மாநில துணைப்பொதுச் செயலர் ஜி.பெருமாள் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் சாலை பணியாளர்களுக்கு கருவூலம் மூலம்  ஊதியம் வழங்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது, சேலத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு  நடைபெறும் பாராட்டு விழா மாநாட்டில்  அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்வது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com