வேலூர்

மினிலாரி மோதி தொழிலாளி பலி

20th Oct 2019 10:13 PM

ADVERTISEMENT

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே நடந்து சென்றவா் மீது மினி லாரி மோதியதில் கூலி தொழிலாளி உயிரிழந்தாா்.

நாட்டறம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி ஊராட்சி முத்தனபள்ளி வட்டம் பகுதியைச் சோ்ந்த கூலிதொழிலாளி சிவலிங்கம்(60) . இவா் வெள்ளிக்கிழமை மாலை 7 மணியளவில் பச்சூா் டோல்கேட் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றாா்.

அப்போது வேலூரிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த மினிலாரி எதிா்பாராதவிதமாக சிவலிங்கம் மீது மோதியது. படுகாயமடைந்த அவா் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மினிலாரி ஓட்டுநா் பிரபுதேவா(26) விடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT