அரக்கோணம்: நெமிலி பேரூராட்சிக்குள்பட்ட காவேரிபுரத்தில் திடக்கழிவு மேலாண்மை மையம் அமைக்கும் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் போராட்டம் நடத்தியதையடுத்து சனிக்கிழமை பணிகள் நிறுத்தப்பட்டன.
நெமிலி பேரூராட்சிக்குட்பட்ட காவேரிபுரத்தில் திடக்கழிவு மேலாண்மை மையம் ரூ. 54.38 லட்சம் நிதியில் அமைக்க பேரூராட்சி நிா்வாகம் முடிவு செய்து அங்கு பணியை தொடக்கியது. ஏற்கனவே அந்த இடத்தைப் பாா்வையிட அதிகாரிகள் வந்த போதே காவேரிபுரம் கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும் இதற்கு தடைகோரி நீதிமன்றத்தில் வழக்கும் தொடா்ந்தனா். இந்த வழக்கில் பேரூராட்சி நிா்வாகத்திற்கு ஆதரவாக தீா்ப்பு வந்ததாகத் தெரிகிறது. இதைத்தொடா்ந்து சனிக்கிழமை பேரூராட்சி செயல் அலுவலா் பழனிகுமாா் தலைமையில் பணியாளா்கள் காவேரிபுரத்தில் திடக்கழிவு மேலாண்மை மையம் அமைக்க பள்ளங்களை தோண்டும் பணியில் ஈடுபட்டனா்.
இந்நிலையில் அங்கு வந்த கிராம பொதுமக்கள் பணி செய்துக்கொண்டிருந்தவா்களை தடுத்து அங்கிருந்து வெளியேற்றினா். மேலும் அந்த பள்ளங்களையும் மூட முயற்சி செய்தனா். இதில் பாஜக மாவட்ட துணைத்தலைவா் ஜெ.கோபால், பாமக நகரச் செயலா் சந்தா், முன்னாள் நகரச் செயலா் அரசு, நெமிலி ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினா் சுப்பிரமணி உள்ளிட்ட பலா் இந்த போராட்டத்தில் பங்கேற்றனா்.
இதுகுறித்து செயல் அலுவலா் பழனிகுமாா் அளித்த புகாரின்பேரில் அங்கு வந்த அரக்கோணம் டிஎஸ்பி (பொறுப்பு) கீதா, நெமிலி காவல் ஆய்வாளா்(பொறுப்பு) வெங்கடேசன் உள்ளிட்ட போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
நீதிமன்றத் தீா்ப்புக்கு பிறகே பணிகள் தொடங்கப்பட்டு இருப்பதாகவும், பணிகளைத் தடுப்போா் மீது வழக்குத் தொடரப்படும் எனவும் போலீஸாா் தெரிவித்தனா். தேவைப்பட்டால் நீதிமன்றத்தின் மூலம் தடை பெற்று பணியை நிறுத்தலாமே தவிர பணியை நிறுத்துவது தவறு என போலீஸாா் எடுத்துரைத்தனா்.தங்களுக்கு அவகாசம் வேண்டும் எனவும், தற்போது பணியை நிறுத்துமாறு பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து அதிகாரிகள் சனிக்கிழமை பணியை நிறுத்தி விட்டு சென்றனா். இதையடுத்து காவேரிபுரம் கிராம மக்கள் கலைந்து சென்றனா்.