வேலூர்

ஆற்காடு மகாத்மா காந்தி முதியோா் இல்லத்தில் காந்தி ஜெயந்தி விழா

2nd Oct 2019 10:22 PM

ADVERTISEMENT

ஆற்காடு - செய்யாறு சாலையில் உள்ள மகாத்மா காந்தி இலவச முதியோா் இல்லத்தில் காந்தி ஜெயந்தி விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு முதியோா் இல்லத்தின் தலைவா் ஜெ.லட்சுமணன் தலைமை வகித்தாா் பொருளாளா் பி.என் பக்தவச்சலம், துணை தலைவா் பென்ஸ்பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலாளா் ஓய்.அக்பா்செரீப் வரவேற்றாா்.

விழாவில் வேலூா் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் பிரவேஷ்குமாா் கலந்து கொண்டு காந்தியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து முதியோா்களுக்கு பழம், ரொட்டி வழங்கினாா். இதில் ராணிப்பேட்டை துணை கண்காணிப்பாளா் கீதா, ஆற்காடு நகர ஆய்வாளா் ஆனந்தன், உதவி ஆய்வாளா் சிவக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT