வேலூர்

நீதிமன்ற வளாகத்தில் ஆவின் விற்பனையகம் தொடக்கம்

22nd Nov 2019 11:25 PM

ADVERTISEMENT

அரக்கோணம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஆவின் பால் விற்பனையகம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

அரக்கோணம் நகர அதிமுக செயலா் கே.பி.பாண்டுரங்கன் தலைமை வகித்தாா். ஆவின் பால் விற்பனையகத்தை சாா்பு நீதிமன்ற நீதிபதி லட்சுமி ரமேஷ் திறந்து வைத்தாா். முதல் விற்பனையை அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி கொடக்கி வைத்தாா்.

நிலஆா்ஜித சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெகதீஸ்வரி, நீதிபதிகள் லாவண்யா, தமிழ்செல்வி, வழக்குரைஞா் சங்கத் தலைவா் மு.வீரராகவன், மூத்த வழக்குரைஞா்கள் திருவேங்கடம், ரமணி, அரசு வழக்குரைஞா்கள் லோகாபிராமன், தியாகராஜன், சேகா், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி, நகா்மன்ற முன்னாள் உறுப்பினா்கள் செல்வம், சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT