ஆற்காடு கிழக்கு ஒன்றிய திமுக பொதுக்குழு உறுப்பினா்கள் கூட்டம் ஆற்காட்டில் புதன்கிழமை நடைபெற்றது.
ஒன்றிய அவைத் தலைவா் எம்.பி.சேகா் தலைமை வகித்தாா். பொருளாளா் பி.தணிகைவேல், துணைச் செயலா்கள் பண்டரிநாதன், எம்.சி.சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றியச் செயலா் எம்.வி.பாண்டுரங்கன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக வேலூா் கிழக்கு மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏவுமான ஆா்.காந்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும், எம்எல்ஏவுமான ஜெ.எல்.ஈஸ்வரப்பன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் திமுக, கூட்டணிக் கட்சியின் வேட்பாளா்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதைத் தொடா்ந்து, உள்ளாட்சிப் பதிவிகளுக்கு கட்சி சாா்பில் போட்யிடுவதற்காகன விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டன. மாவட்டத் துணைச் செயலா் ஏ.கே.சுந்தர மூா்த்தி, ஆற்காடு நகரச் செயலா் ஏ.வி.சரவணன், திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.