மனைவியை எரித்து கொன்றவருக்கு ஆயுள் சிறை

குடும்பப் பிரச்னையில் மனைவியை எரித்துக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து

குடும்பப் பிரச்னையில் மனைவியை எரித்துக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூர் கூடுதல் விரைவு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
 பேர்ணாம்பட்டு அருகே தரைக்காடு அலிமஜீத் தெருவைச் சேர்ந்தவர் முஹம்மது சஹீத் (31). இவரது 2-ஆவது மனைவி சுல்தானா (24). இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்பப் பிரச்னை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 2018 மார்ச் 29-ஆம் தேதி தம்பதிக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த முஹம்மது சஹீத், சுல்தானாவின் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துள்ளார். பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுல்தானா உயிரிழந்தார். 
இதுகுறித்து பேர்ணாம்பட்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, முஹம்மது சஹீத்தை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை வேலூர் கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  
வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.குணசேகரன், குற்றம் சாட்டப்பட்ட முஹம்மது சஹீத்துக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார். இதையடுத்து, அவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com