பேர்ணாம்பட்டில் போக்குவரத்து பாதிப்பு

குறாவளிக் காற்று காரணமான பேர்ணாம்பட்டு கௌராபேட்டை பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரம் இருந்த புளிய மரம்

குறாவளிக் காற்று காரணமான பேர்ணாம்பட்டு கௌராபேட்டை பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரம் இருந்த புளிய மரம் முறிந்து விழுந்ததில் அங்குள்ள தொழிலாளி ராமலிங்கத்தின் (70) வீடு சேதமடைந்தது. இதனால் இச்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
அதிகாரிகள் பொக்லைன் இயந்திரங்களுடன் அங்கு சென்று மரத்தை  அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீரமைத்தனர். மரம் முறிந்து விழுந்ததில் 2 மின் கம்பங்களும் சேதமடைந்தன. இதனால் அப்பகுதியில் மின்விநியோகம் தடைபட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com