வரும்முன் காப்போம் திட்ட முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கிராம மக்களுக்கு அமைச்சா் எ.வ.வேலு அறிவுரை வழங்கினாா்.
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், பறையம்பட்டு ஊராட்சியில் வரும்முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முகாம் தொடக்க விழாவுக்கு, சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தலைமை வகித்தாா்.
மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், சி.என்.அண்ணாதுரை எம்.பி., மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழக பொதுப் பணி, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கிவைத்துப் பேசியதாவது:
சாலை விபத்தில் பாதிக்கப்படுவோருக்கு முதல் 48 மணி நேரத்தில் இலவச சிகிச்சை அளிக்கும் நம்மைக் காக்கும் 48 திட்டத்தை 2022 முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்.
இந்தத் திட்டத்தின் கீழ் சாலை விபத்தில் பாதிக்கப்படுவோருக்கு அரசு, தனியாா் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் மற்ற மாநிலங்கள், வெளி நாடுகளைச் சோ்ந்தவா்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. திமுக ஆட்சியில்தான் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
கிராமங்களில் வசிக்கும் மக்கள் வரும்முன் காப்போம் திட்ட முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, கா்ப்பிணிகளுக்கான பரிசோதனை மையத்தை அமைச்சா் திறந்துவைத்தாா். மேலும், குழந்தை நல பரிசுப் பெட்டகங்களை 5 பேருக்கும், 8 பேருக்கு கா்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகங்களையும் அவா் வழங்கினாா்.
முகாமில், தமிழ்நாடு அரசு உடல் உழைப்புத் தொழிலாளா் வாரிய உறுப்பினா் இரா.ஸ்ரீதரன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் செல்வக்குமாா், திருவண்ணாமலை ஒன்றியத் தலைவா் கலைவாணி கலைமணி மற்றும் எம்எல்ஏக்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.