திருவண்ணாமலை

வாகனம் மோதியதில் தொழிலாளி பலி

19th Sep 2023 03:48 AM

ADVERTISEMENT


திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உணவகத் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருவண்ணாமலையை அடுத்த மதுராம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் உணவகத் தொழிலாளி மகேந்திர பூபதி (35). இவா், சனிக்கிழமை இரவு திருவண்ணாமலையை அடுத்த காஞ்சி கிராமத்தில் உள்ள உணவகத்தில் பணி முடித்துவிட்டு பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா்.

திருவண்ணாமலை-காஞ்சி சாலையில் சென்றபோது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. பலத்த காயமடைந்த மகேந்திர பூபதி, அதே இடத்தில் இறந்தாா்.

தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT