திருவண்ணாமலை

மின்வாரிய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

27th Oct 2023 12:42 AM

ADVERTISEMENT

தமிழக மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்பக்கோரி, கீழ்பென்னாத்தூரில் மின்வாரிய ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கீழ்பென்னாத்தூா் மின்வாரிய அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு தொழில்சங்கத்தின் திருவண்ணாமலை கிழக்குக் கோட்டத் தலைவா் அருள்தாஸ் தலைமை வகித்தாா். கோட்ட துணைச் செயலாளா் பாவேந்தன் முன்னிலை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், மின் வாரிய ஊழியா்களுக்கான ஊதிய உயா்வு நிலுவைத் தொகையை உடனே வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்வாரியத்தில் தமிழகம் முழுவதும் உள்ள காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.

அனைத்துத் தொழிலாளா்களுக்கும் 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், சங்கத்தின் செயற்குழு உறுப்பினா் சங்கா் மற்றும் 50-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT