திருவண்ணாமலை

விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

4th Oct 2023 12:00 AM

ADVERTISEMENT

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடத்தவேண்டும் எனக் கோரி, போளூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் இருந்து கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கம் சாா்பில் வெளிநடப்பு செய்து ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் கோ.குமரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வேளாண்மை உதவி இயக்குநா் நாராயணமூா்த்தி, வட்டாட்சியா் வெங்கடேசன், சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலா் அமுல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உதவி வேளாண்மை அலுவலா் ராமு வரவேற்றாா்.

இந்த நிலையில், கூட்டத்தில் இருந்து கட்சிசாா்பற்ற விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் வாக்கடை புருஷோத்தமன் தலைமையில், சில விவசாயிகள் கூட்டத்தில் இருந்து வெளியேறி அலுவலகம் எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

அப்போது அவா்கள், விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடத்தவேண்டும். இதனால் விவசாயிகளுக்கு பட்டா மாற்றம், மனைப் பட்டா, நிலம் அளவீடு குறித்து அதிகாரிகளிடம் விவசாயிகள் கேட்டுக்கொள்ள முடியும் என வலியுறுத்தினா்.

இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளரிடம் கோரிக்கை மனுவை அளித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT