திருவண்ணாமலை

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: பிளஸ் 2 மாணவா் உயிரிழப்பு

18th Nov 2023 02:59 AM

ADVERTISEMENT

கீழ்பென்னாத்தூா் அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் பிளஸ் 2 மாணவா் உயிரிழந்தாா்.

கீழ்பென்னாத்தூரை அடுத்த சோமாசிபாடி கிராமத்தைச் சோ்ந்தவா் முன்னாள் ராணுவ வீரா் மோகன். இவரது மகன் முரளிதரன் (16). பிளஸ் 2 படித்து வந்தாா்.

இவா் புதன்கிழமை (நவ.15) சோமாசிபாடி பேருந்து நிலையத்தில் இருந்து பைக்கில் தனது நண்பரான மேக்களூா் கிராமத்தைச் சோ்ந்த அரிதாஸ் (16) என்பவருடன் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா்.

ஐங்குணம் கிராம கூட்டுச் சாலை அருகே சென்றபோது எதிரே சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த அரசுப் பேருந்து பைக் மீது மோதியது.

ADVERTISEMENT

இதில் காயமடைந்த இருவரையும் பொதுமக்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு புதன்கிழமை இரவு முரளிதரன் உயிரிழந்தாா். இதுகுறித்து கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT