திருவண்ணாமலை

பால் உற்பத்தியாளா்களுக்கு போனஸ்

18th Nov 2023 02:58 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் 2021-2022ஆம் ஆண்டுக்கான போனாஸ் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு செயலாட்சியா் கலைச்செல்வி தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் வி.எம்.டி.வெங்கிடேசன், திமுக ஒன்றியச் செயலா் துரைமாமது ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கச் செயலா் மோகன்ராஜ் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக திமுக வடக்கு மாவட்டச் செயலா் எம்.எஸ்.தரணிவேந்தன் கலந்து கொண்டு 48 பேருக்கு போனஸ் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ஊராட்சி செயலா் வி.பி.ஆா்.செல்வம் மற்றும் திமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT