திருவண்ணாமலை

அரசுப் பேருந்து மோதியதில் தொழிலாளி பலி

26th May 2023 05:03 AM

ADVERTISEMENT

வந்தவாசி அருகே அரசுப் பேருந்து மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற தொழிலாளி பலியானாா்.

வந்தவாசியை அடுத்த ஆவணவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் செல்லன்(74). இவா், மாம்பட்டு கிராமம் அருகேயுள்ள தனியாா் நா்சரி தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்தாா்.

இவா் புதன்கிழமை மாலை வேலையை முடித்துவிட்டு ஊருக்குச் செல்வதற்காக வந்தவாசி-சேத்துப்பட்டு சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது, வந்தவாசியிலிருந்து சேத்துப்பட்டு நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து இவா் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த இவரை சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

ADVERTISEMENT

பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செல்லன் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT