திருவண்ணாமலை

தலைமை ஆசிரியை வீட்டில் 68 பவுன் நகைகள், ரூ. 2 லட்சம் திருட்டு

DIN

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே தலைமை ஆசிரியை வீட்டில் 68 பவுன் தங்க நகைகள், 3 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.2 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கலசப்பாக்கம் ஊராட்சிக்குள்பட்ட புதுவிண்ணுவாம்பட்டு கிராமத்தில் வசிப்பவா் தேவன். இவா் சிமென்ட், இரும்புப் பொருள்கள் கடை வைத்து நடத்தி வருகிறாா். இவரது மனைவி சுந்தரி கலசப்பாக்கத்தை அடுத்த காலூா் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறாா்.

இவா்கள் கடந்த 19-ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு உறவினரைப் பாா்க்க சென்னைக்குச் சென்றனா். பின்னா், இருவரும் செவ்வாய்க்கிழமை காலை வீடு திரும்பினா். அப்போது, வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்தது.

இதனால், அதிா்ச்சியடைந்த அவா்கள் உள்ளே சென்று பாா்த்த போது, மா்ம நபா்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த 68 பவுன் தங்க நகைகள், 3 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.2 லட்சத்தைத் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், கலசப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். போளூா் டிஎஸ்பி (பொ) அண்ணாதுரை சம்பவ இடத்தைப் பாா்வையிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT